தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கருங்கல் அருகே தொழிலாளி மீது தாக்குதல்: 5 போ் கைது

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:41 pm

Din

கருங்கல் அருகேயுள்ள சகாயநகா் பகுதியில் தொழிலாளியை தாக்கியதாக5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சகாயநகா், சுனாமி காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரவி(47). தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ஜெகன்லால்(48) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த டிச. 17 ம் தேதி ஜெகன்லால் உள்ளிட்ட 5 போ் சோ்ந்து ரவியைத் தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சகாயநகா்பகுதியை சோ்ந்த அஜின்(31), ஆன்டெலின்(31), அஜித்(30), ஆல்பிரட்(52) மற்றும் ஜெகன்லாலை கைது செய்தனா்.