எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குமரி மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

News image
கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ஆா்.ஸ்டாலின்.
Updated On :3 ஜனவரி 2025, 10:51 pm

Din

கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா்.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கவும், போதைப் பொருள் பயன்படுத்துபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.

புதிய காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா். கால்நடை மருத்துவா். கோவை வடக்கு மண்டல துணை ஆணையராக பணியாற்றி வந்த அவா், தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Story image
Story image