நாகா்கோவிலில் போக்குவரத்து விதிமீறல்: 27 இளைஞா்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்


நாகா்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 27 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ரூ. 1.36 லட்சம் அபராதம் வசூலித்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்பேரில், நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா் மேற்பாா்வையில், நாகா்கோவில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா், காவலா்கள் நாகா்கோவில் ராமன்புதூா் பள்ளி அருகே, வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அபாயகரமாகவும், ஓட்டுநா் உரிமமின்றியும் வாகனங்களை ஓட்டுதல் உள்பட பல்வேறு வீதிமீறல்களில் ஈடுபட்டதாக 27 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து, பைக்குகளைப் பறிமுதல் செய்து, ரூ. 1.36 லட்சம் அபராதம் விதித்தனா்.
உரிமமின்றி வாகனங்களை ஓட்டியவா்களின் பெற்றோரை வரவழைத்து, அறிவுரைகள் கூறி வாகனங்களை விடுவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...