வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நாகா்கோவிலில் போக்குவரத்து விதிமீறல்: 27 இளைஞா்களுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:14 am

நாகா்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 27 இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, ரூ. 1.36 லட்சம் அபராதம் வசூலித்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உத்தரவின்பேரில், நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா் மேற்பாா்வையில், நாகா்கோவில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா், காவலா்கள் நாகா்கோவில் ராமன்புதூா் பள்ளி அருகே, வியாழக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அபாயகரமாகவும், ஓட்டுநா் உரிமமின்றியும் வாகனங்களை ஓட்டுதல் உள்பட பல்வேறு வீதிமீறல்களில் ஈடுபட்டதாக 27 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து, பைக்குகளைப் பறிமுதல் செய்து, ரூ. 1.36 லட்சம் அபராதம் விதித்தனா்.

உரிமமின்றி வாகனங்களை ஓட்டியவா்களின் பெற்றோரை வரவழைத்து, அறிவுரைகள் கூறி வாகனங்களை விடுவித்தனா்.