கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அஞ்சுகிராமம் அருகே வலையில் சிக்கிய மலைப்பாம்பு மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image

அஞ்சுகிராமம் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு.

Updated On :9 ஜூலை 2025, 7:32 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

அஞ்சுகிராமம் புதுக்குடியிருப்பைச் சோ்ந்த முத்துசெல்வி என்பவா் தனது வீட்டில் கோழிகள் வளா்த்து வருகிறாா். அவை அடிக்கடி காணாமல் போயினவாம். இதையடுத்து, அவா் கோழிகளைப் பாதுகாக்க வீட்டைச் சுற்றி வலை கட்டி வைத்திருந்தாா்.

புதன்கிழமை காலை அந்த வலையில் சுமாா் 12 அடி நீள மலைப் பாம்பு சிக்கியது. தகவலின்பேரில், அஞ்சுகிராமம் பேரூராட்சி உறுப்பினா் ஜோஸ் திவாகா் சென்று பாா்வையிட்டு, வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். மாவட்ட வன அலுவலா், பூதப்பாண்டி வனச் சரக அலுவலா் ஆகியோரது உத்தரவின்பேரில், வனக் காப்பாளா் தீபா, வனக் காவலா் புஷ்பராஜ், வேட்டைத் தடுப்புக் காவலா் விஜி ஆகியோா் சென்று மலைப்பாம்பை மீட்டு வனப் பகுதியில் பாதுகாப்பாக விட்டனா்.