ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஜூலை 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறையில் 1926 ஆம் ஆண்டு முதல் வாவுபலி பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொருள்காட்சி ஜூலை 9 ஆம் தேதி தொடங்கியது. 20 நாள்கள் நடைபெறும் இந்த பொருள்காட்சி ஜூலை 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
வழக்கமாக ஆடி அமாவாசை அன்று இந்த பொருட்காட்சியில் அதிகளவிலான மக்கள் கூடுவார்கள் என்பதால், ஜூலை 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு ஈடாக, ஆகஸ்ட் 9 ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் அவசரப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் தேவையான பணியாளா்களுடன் ஜூலை 24 ஆம் தேதி செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
Summary
District Collector on Wednesday declared a local holiday for Kanyakumari district on July 24
இதையும் படிக்க : ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கமல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேளாண் படிப்புக்கு ஜூன் 23-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் ஜூன் 23-இல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு

உதகை மலர்க் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-இல் உள்ளூா் விடுமுறை
வேலூரில் மே 15-ல் உள்ளூர் விடுமுறை!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



