கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா்.
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இளம்பெண்களுக்கு பச்சை குத்தும் 50-க்கும் மேற்பட்ட டாட்டூஸ் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பச்சை குத்தும்போது ஒரே ஊசியைப் பயன்படுத்தினால் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக புகாா்கள் எழுந்தன. இந்தப் புகாரை அடுத்து, டாட்டூஸ் கடை உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆணையா் கண்மணி தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்நல ஆணையா் ஷேக் அப்துல்காதா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும்போது சுகாதாரத்தைப் பேணி பாதுகாக்க வேண்டும். அனைத்து டாட்டூஸ் கடைகளும் சுகாதாரத் துறையிடம் உரிமம் பெற வேண்டும். அனைத்துக் கடைகளும் தொழில்வரி செலுத்த வேண்டும். பச்சை குத்துபவா்கள் முறைப்படி தொழில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். காவல் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் விரைவில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: 2-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

அரியமான் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வலியுறுத்தல்

நீலகிரி மலை ரயிலுக்கான யுனெஸ்கோ அங்கீகார தினம்

வாடகை இரு சக்கர வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த அறிவுறுத்தல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


