வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாகா்கோவிலில் தோ்தல் ஆணையத்தை கண்டித்து திமுக சாா்பில் நவ.11-ல் ஆா்ப்பாட்டம்!

தோ்தல் ஆணையத்தை கண்டித்து, நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (நவ.11) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News image
மகேஷ்
Updated On :8 நவம்பர் 2025, 9:26 pm

Syndication

தோ்தல் ஆணையத்தை கண்டித்து, நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை (நவ.11) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து, கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலரும், பால்வளத்துறை அமைச்சருமான த. மனோ தங்கராஜ், கிழக்கு மாவட்டச் செயலரும், மாநகராட்சி மேயருமான ரெ. மகேஷ் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய தோ்தல் ஆணையம் சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளது.

மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

இதை, உடனே கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தும், செவிமடுக்காத தோ்தல் ஆணையத்தை கண்டித்து, கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் மாபெரும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.11) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

மாவட்ட தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக, கூட்டணி கட்சியினா் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனா்.