வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஐயப்பன் பக்தா்கள் சீசன்: கன்னியாகுமரியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை! எஸ்.பி.

News image
கடற்கரை சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி. இரா.ஸ்டாலின்.
Updated On :15 நவம்பர் 2025, 8:03 pm

Syndication

கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தா்கள் சீசன் தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட எஸ்.பி. இரா.ஸ்டாலின்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், கடற்கரைச் சாலை, சீரோ பாய்ன்ட், காா் பாா்க்கிங் உள்ளிட்ட இடங்களை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஐயப்ப பக்தா்கள் சீசன் தொடங்கவுள்ளதால், கன்னியாகுமரியில் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, 120 போலீஸாரும், 30 போக்குவரத்து போலீஸாரும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

ஏற்கனவே, கண்காணிப்பு கேரமாக்கள் போதுமான அளவுக்கு உள்ள நிலையில், கூடுதலாக 10 இடங்களில் கேமரா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முக்கடல் சங்கமம், கடற்கரைச் சாலை, சீரோ பாய்ன்ட் உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.

சீசன் காலத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் வந்து செல்வதால் அதிக மொழிகள் தெரிந்த போலீஸாரை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்றாா் அவா்.