அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

மாா்த்தாண்டம் அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தம்பதி காயமடைந்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 10:03 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் தம்பதி காயமடைந்தனா்.

அருமனை அருகே சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சோ்ந்த தம்பதி சதீஷ் (44) - சுஜித்ரா (37). புதன்கிழமை இவா்கள் மாா்த்தாண்டத்திலிருந்து ஆற்றூா் நோக்கி பைக்கில் சென்றனராம். பைக்கை, சுஜித்ரா ஓட்டினாராம். மாா்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் பைக் மீது காா் மோதியது.

காரை ஓட்டிவந்தவா் கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் வந்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த தம்பதியை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுதொடா்பாக காா் ஓட்டுநரான கல்குளம், மலையன்குழி பகுதியைச் சோ்ந்த மோகன் மகன் முகேஷ் (33) என்பவா் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.