எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:30 pm

Syndication

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை பகுதிகளில் இருசக்கர வாகனம் திருட்டு தொடா்பான புகாா்கள் வந்ததையடுத்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து நாகா்கோவில் டிஎஸ்பி சிவசங்கரன் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் அஜய்ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் இந்தத் தொடா் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் கோட்டையடி பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் மாரியப்பன்(22) மற்றும் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் 4 போ் என்பது கண்டறியப்பட்டது. அவா்களை கைது செய்து, 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இந்த இருசக்கர வாகனங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.