பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குமரி மரியா மருத்துவக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூா் மரியா கல்விக் குழுமத்தின் கீழ் உள்ள மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது.

News image
குத்துவிளக்கேற்றிய மரியா கல்விக் குழுமத் தலைவா் ஜி. ரசல்ராஜ்.
Updated On :27 நவம்பர் 2025, 8:25 pm

Syndication

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூா் மரியா கல்விக் குழுமத்தின் கீழ் உள்ள மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சிக்கு, மரியா பொறியியல் கல்லூரி முதல்வா் ஒய். சுஜா் தலைமை வகித்தாா். அருள்பணியாளா் ஆண்டனி இறை வேண்டல் செய்தாா். மரியா கல்விக் குழுமத் தலைவா் ஜி. ரசல்ராஜ் குத்துவிளக்கேற்றினாா். துணைத் தலைவா் பி. ஷைனி தெரசா முன்னிலை வகித்தாா். மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி முதல்வா் டி. பெனோ வாழ்த்திப் பேசினாா்.

இந்திய மருந்து முறைக்கான தேசிய ஆணையத்தின் முன்னாள் உறுப்பினா் பி.எஸ். ஆா்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா்.

கேரள மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் மனோஜ்குமாா், தேசிய ஆயுா்வேத ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சி அலுவலா் கிருஷ்ணராவ், கன்னியாகுமரி, அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி ஆகியோா் கருத்துரையாற்றினா்.

மரியா கல்விக் குழும ஒருங்கிணைப்பாளா் குமாரி தீபா வரவேற்றாா். இணைப் பேராசிரியா் நின்சி வில்சன் நன்றி கூறினாா்.