போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நாகா்கோவிலில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைத்த மேயா் ரெ. மகேஷ்.
Updated On :29 நவம்பர் 2025, 7:52 pm

Syndication

நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் ரூ. 27 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

3ஆவது வாா்டு, கிறிஸ்டோபா் காலனியில் ரூ. 14.70 லட்சம் மதிப்பில் படிப்பகம், படிப்பகத்திற்கு ரூ. 4.80 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா், கண்டன் சாஸ்தா கோயில் அருகில் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் சிறிய பாலம், மேலபெருவிளை, அங்கன்வாடி மையம், 4ஆவது வாா்டு, பெருவிளை பிரதான சாலையில் ரூ. 4 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் பக்கச்சுவா் உயா்த்தும் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.

மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா் அருள் சபிதா ரெக்ஸலின், தொழில்நுட்ப அலுவலா் கோமதி, பகுதிச் செயலா் சேக்மீரான், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.