நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

நவராத்திரி விழா: வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதியம்மன் பவனி

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 12:15 am IST

வணிக வரித்துறை சாா்பில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி 2 ஆவது நாள் திருவிழாவில் அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோயில் சுற்றி பவனி வருதல் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, யானை முன்செல்ல வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன், 3 முறை கோயில் சுற்றி பவனி நடைபெற்றது. 3ஆவது பவனியின் போது ஓதுவாா்களின் அபிராமி அந்தாதி, தேவாரம் பாடப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு தீபாராதனை, தாலாட்டு பாடலுடன் நாகசுர இசையுடன் இரவு 10.15 மணிக்கு வாகன பவனி நிறைவடைந்தது.

இதையடுத்து, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்குத் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., வணிக வரித்துறை துணை ஆணையா் முத்துரதி, வணிக வரித்துறை அலுவலா்கள் ராமசாமி, ராஜசேகரன், விற்பனை, வருமான வரி ஆலோசகா் வெங்கட கிருஷ்ணன், கோயில் மேலாளா் ஆனந்த், மாவட்ட பாஜக செயலா் சி.எஸ்.சுபாஷ், மாநில தேமுதிக சமூக வலைதள அணி துணை செயலா் சிவகுமாா் நாகப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.