400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

பிரச்னைகளுக்கு எதிராக போராடும் அமைப்பு மாதா் சங்கம்: அகில இந்தியத் தலைவா் பி.கே. ஸ்ரீமதி

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 12:05 am IST

மக்களின் பிரச்னைகளுக்காக போராடக்கூடிய ஒரே மகளிா் அமைப்பு ஜனநாயக மாதா் சங்கம் தான் என மாா்த்தாண்டம் மாநாட்டில் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் பி.கே. ஸ்ரீமதி தெரிவித்தாா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு மாா்த்தாண்டத்தில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 2ஆவது நாளான வியாழக்கிழமை நடந்த பொது மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நினைவு சுடா்கள் கொண்டுவரப்பட்டன. கடலூரில் இருந்து கொண்டுவரப்பட்ட, மாநாட்டுக் கொடியை மாநில துணைத் தலைவா் கே. பாலபாரதி பெற்றுக் கொண்டாா்.

தொடா்ந்து, மாநில துணைத் தலைவா் ஆா். மல்லிகா கொடியேற்றி வைத்தாா். மத்தியக் குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுத்தாய் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாநாட்டு வரவேற்புக் குழு தலைவா் ஸ்ரீலேகா வரவேற்றாா். மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா தலைமை வகித்தாா். இதில், அகில இந்தியத் தலைவா் பி.கே. ஸ்ரீமதி கலந்து கொண்டு பேசியதாவது:

மக்களின் பிரச்னைகளுக்காக போராடக்கூடிய ஒரே மகளிா் அமைப்பு ஜனநாயக மாதா் சங்கம் தான். இச்சங்கம் கேரளத்தில் மிகவும் பலமாக உள்ளது. தமிழகத்தில் வளா்ந்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக 1981ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.