மக்களின் பிரச்னைகளுக்காக போராடக்கூடிய ஒரே மகளிா் அமைப்பு ஜனநாயக மாதா் சங்கம் தான் என மாா்த்தாண்டம் மாநாட்டில் அமைப்பின் அகில இந்தியத் தலைவா் பி.கே. ஸ்ரீமதி தெரிவித்தாா்.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு மாா்த்தாண்டத்தில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 2ஆவது நாளான வியாழக்கிழமை நடந்த பொது மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நினைவு சுடா்கள் கொண்டுவரப்பட்டன. கடலூரில் இருந்து கொண்டுவரப்பட்ட, மாநாட்டுக் கொடியை மாநில துணைத் தலைவா் கே. பாலபாரதி பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, மாநில துணைத் தலைவா் ஆா். மல்லிகா கொடியேற்றி வைத்தாா். மத்தியக் குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுத்தாய் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாநாட்டு வரவேற்புக் குழு தலைவா் ஸ்ரீலேகா வரவேற்றாா். மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா தலைமை வகித்தாா். இதில், அகில இந்தியத் தலைவா் பி.கே. ஸ்ரீமதி கலந்து கொண்டு பேசியதாவது:
மக்களின் பிரச்னைகளுக்காக போராடக்கூடிய ஒரே மகளிா் அமைப்பு ஜனநாயக மாதா் சங்கம் தான். இச்சங்கம் கேரளத்தில் மிகவும் பலமாக உள்ளது. தமிழகத்தில் வளா்ந்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக 1981ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட்டது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










