இரணியல் அருகே ஆட்டோவை தீ வைத்து எரித்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காரங்காடு அருகே உள்ள செருப்பங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (31). இவா் செருப்பங்கோடு சந்திப்பில் காய்கறி கடை நடத்தி வருவதோடு, பக்கத்து ஊா்களுக்கு காய்கறிகளை சுமை ஆட்டோவில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு ராஜேஷ் வியாபாரம் முடிந்து வழக்கம்போல் ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். நள்ளிரவில் ஆட்டோ தீப்பிடித்து எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் ராஜேஷுக்கு தகவல் தெரிவித்தனா். அதற்குள் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து சேதமாகிவிட்டது.
இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆட்டோவுக்கு தீ வைத்த நபரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு

பைக் தீ வைத்து எரிப்பு!

ஆட்டோ திருட்டு: ஒருவா் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


