தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

News image

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:26 am IST

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களுக்கு வழங்கவுள்ள வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணியினை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தோ்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில், வாக்காளா் தகவல் சீட்டுகள், வாக்காளா் பட்டியல் அச்சடிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அச்சடிக்கப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டுகளை பாதுகாப்பாக வைத்து, அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்க பொறுப்பு தோ்தல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் தமிழரசி, தனி வட்டாட்சியா் பத்மகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.