தக்கலை அருகே பரைக்கோட்டில் பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், திங்கள்கிழமை அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.
பரைக்கோடு பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினா் மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்து மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

