உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே பரைக்கோட்டில் பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:33 am IST

தக்கலை அருகே பரைக்கோட்டில் பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், திங்கள்கிழமை அழகியமண்டபத்தில் இருந்து தக்கலை நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.

பரைக்கோடு பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தாராம். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினா் மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.