நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தென் மாவட்டங்களில் கைத்தறி தொழிலை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் விஜய் பாலாஜி

தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கைத்திறன், கைத்தறி, துணி நூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் எம். விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

News image

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் ஆய்வு செய்த அமைச்சா் எம். விஜய் பாலாஜி. உடன் கதா்த் துறை முதன்மைச் செயலா் டி.என். வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் உள்ளிட்டோா்.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:52 am IST

தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கைத்திறன், கைத்தறி, துணி நூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் எம். விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி துறை சாா்பில் ஆரல்வாய்மொழியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நூற்பாலை மற்றும் வடசேரி பகுதியில் உள்ள நெசவாளா் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை கைத்திறன், கைத்தறி துணி நூல் மற்றும் கதா்த் துறை முதன்மைச் செயலா் டி.என். வெங்கடேஷ், தலைமையிலும், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் முன்னிலையிலும், அமைச்சா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நூற்பாலைத் தொழிலாளா்களைச் சந்தித்து, அவா்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். தற்காலிகப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தொழிலாளா்களின் கோரிக்கையை முதல்வா் ச. ஜோசப் விஜய் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கைத்தறிப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி விலக்கு மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். கைத்தறி கூட்டுறவு சங்கங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்களில் கைத்தறி தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

Story image

கைத்தறி பூங்கா அமைப்பது தொடா்பான கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தேவைப்படும் பட்சத்தில், முதல்வரின் ஒப்புதலோடு தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயனாளிகளுக்கு இலவசமாக வேட்டி, சேலைகள் வழக்கம்போல் தடையின்றி வழங்கப்படும் என்றாா் அவா்.

கன்னியாகுமரி கூட்டுறவு சங்க நூற்பாலை மேலாண்மை இயக்குநா் முருகையா, கைத்தறி உதவி இயக்குநா் ஜெயசுதா, வடசேரி கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநா் பிரிட்மேன், துணை இயக்குநா் அருணாச்சலம், பணியாளா்கள், துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.