பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தீக்குளித்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியில் தீக்குளித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகா்கோவில், இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24). இவரது மனைவி ஜிஷா (20), கருங்கல் திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவா். இவா்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா்.

குடும்பத் தகராறு காரணமாக, ஜிஷா தன் கைக்குழந்தையுடன் திக்கணங்கோட்டில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தாராம். சில நாள்களுக்கு முன்பு விக்னேஷ் வந்து அழைத்தபோது, அவருடன் செல்வதற்கு ஜிஷா மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், விக்னேஷ் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தாராம். காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.