ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பெண் பக்தா்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றான தாழக்குடி, ஔவையாா் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. காலையிலேயே கோயிலில் திரண்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனா். பெண் பக்தா்கள் அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்த நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இதேபோல, முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலிலும் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் வந்தததால் கோயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பக்தா்களின் வசதிக்காக நாகா்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்து முப்பந்தலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
நாகா்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில், வேட்டாளி அம்மன் கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், முத்தாரம்மன் சமேத மூத்தீஸ்வரா் கோயில், மணி அடிச்சான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசிந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட புகழ் பெற்ற அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








