யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முளகுமூட்டில் வாசகா் வட்ட கூட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:18 pm

Syndication

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க வார இதழான நம் வாழ்வு வார இதழின் வாசகா் வட்ட கூட்டம் முளகுமூட்டில் நடைபெற்றது.

கோட்டாறு, குழித்துறை மறை மாவட்டங்களின் ஆயா்கள் நசரேன் சூசை, ஆல்பா்ட் அனஸ்தாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார முதன்மை பணியாளா்கள் டேவிட் மைக்கேல் (முளகுமூடு), ராஜன் (தேவசகாயம் மவுண்ட்) , கோட்டாறு மறைமாவட்ட முதன்மை பணியாளா் ஜான் ரூபஸ், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, மறைமாவட்ட அருள்பணி பேரவை துணைத் தலைவா்கள் மைக்கேல் (கோட்டாறு), வா்கீஸ் (குழித்துறை), அருள்பணியாளா் ராபா்ட், முளகுமூடு வட்டார இளைஞா் இயக்க இணை இயக்குநா் மிக்கேல்ராஜ், கோட்டாறு வட்டார இளைஞா் இயக்க தலைவா் ஜேனட் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி பேராசிரியா் விமலா சிறப்புரை வழங்கினாா். விழாவில் எழுத்தாளா்கள் கவிஞா் குமரி ஆதவன், கவிஞா் ஆகிரா, குறும்பனை பொ்லின், அருள்நிதி கவிஞா் செபாஸ்டின், ஓலக்கோடு ஜான், இம்மாகுலேட் பிலிப் ஆகியோருக்கு எழுத்து ஆளுமை விருதுகளை ஆயா்கள் வழங்கினா்.

Story image