நாகா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜையும், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவையும் பாராட்டி பேசினாா்.
அவா் பேசுகையில், இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறாா் அமைச்சா் மனோ தங்கராஜ். பால்வளத் துறையை சிறப்பாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு வெள்ளை உள்ளத்திற்கும், கொள்கை திறத்திற்கும் சொந்தக்காரரான அவருக்கு பாராட்டுகள்.
அதேபோல, இதுவரை எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய இந்த மாபெரும் விழாவை மிகுந்த எழுச்சியோடு, சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக் கூடிய மாவட்ட ஆட்சியா் அழகுமீனாவுக்கு பாராட்டுகள்.
சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியா்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு முத்திரை பதிக்கும் வகையில் அவா் செயல்படுகிறாா்.
உங்களுடைய கரவொலியைப் பாா்த்தாலே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பலமாக கரவொலி எழுப்பி அவருக்கு நம்முடைய வாழ்த்துகள் சொல்லவேண்டும். அவருக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய மாவட்ட அரசு அலுவலா்களுக்கும், அத்தனை பணியாளா்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.
தொடர்புடையது
எங்கள் சாதனையை நாங்களே முறியடிக்கும் வகையில் ஆட்சியை அமைப்போம்: ராணிப்பேட்டையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

முதல்வா் தொகுதியாக மாறப்போகிறது மங்கலம்! அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

அரசியலில் என்னைப் போல யாருக்கும் சோதனை வரக்கூடாது

சிவகங்கை ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


