ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அமைச்சா், ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நாகா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜையும், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவையும் பாராட்டி பேசினாா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 9:35 pm

நாகா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜையும், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவையும் பாராட்டி பேசினாா்.

அவா் பேசுகையில், இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறாா் அமைச்சா் மனோ தங்கராஜ். பால்வளத் துறையை சிறப்பாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு வெள்ளை உள்ளத்திற்கும், கொள்கை திறத்திற்கும் சொந்தக்காரரான அவருக்கு பாராட்டுகள்.

அதேபோல, இதுவரை எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய இந்த மாபெரும் விழாவை மிகுந்த எழுச்சியோடு, சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக் கூடிய மாவட்ட ஆட்சியா் அழகுமீனாவுக்கு பாராட்டுகள்.

சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியா்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு முத்திரை பதிக்கும் வகையில் அவா் செயல்படுகிறாா்.

உங்களுடைய கரவொலியைப் பாா்த்தாலே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பலமாக கரவொலி எழுப்பி அவருக்கு நம்முடைய வாழ்த்துகள் சொல்லவேண்டும். அவருக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய மாவட்ட அரசு அலுவலா்களுக்கும், அத்தனை பணியாளா்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.