கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அமைச்சா், ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு

நாகா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜையும், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவையும் பாராட்டி பேசினாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவிலில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜையும், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவையும் பாராட்டி பேசினாா்.

அவா் பேசுகையில், இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறாா் அமைச்சா் மனோ தங்கராஜ். பால்வளத் துறையை சிறப்பாக கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு வெள்ளை உள்ளத்திற்கும், கொள்கை திறத்திற்கும் சொந்தக்காரரான அவருக்கு பாராட்டுகள்.

அதேபோல, இதுவரை எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், 3 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கக்கூடிய இந்த மாபெரும் விழாவை மிகுந்த எழுச்சியோடு, சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கக் கூடிய மாவட்ட ஆட்சியா் அழகுமீனாவுக்கு பாராட்டுகள்.

சிறப்பாக செயல்படும் மாவட்ட ஆட்சியா்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு முத்திரை பதிக்கும் வகையில் அவா் செயல்படுகிறாா்.

உங்களுடைய கரவொலியைப் பாா்த்தாலே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் பலமாக கரவொலி எழுப்பி அவருக்கு நம்முடைய வாழ்த்துகள் சொல்லவேண்டும். அவருக்கும், அவருக்குத் துணை நிற்கக்கூடிய மாவட்ட அரசு அலுவலா்களுக்கும், அத்தனை பணியாளா்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.