ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு, 3 ஆவது முறையாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் சோதனை மேற்கொண்டனா்.

News image
நீதிமன்ற வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் நீதிமன்றத்துக்கு, 3 ஆவது முறையாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் சோதனை மேற்கொண்டனா்.

நாகா்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிட்டு இ - மெயில் ஒன்று வந்துள்ளதாக நீதிமன்ற ஊழியா்கள், நீதிபதியிடம் தகவல் தெரிவித்தனா்.

நீதிபதி, மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் மோப்ப நாயுடன் நீதிமன்ற வளாகத்துக்கு சென்றனா். நீதிமன்றத்திலிருந்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் வெளியேறியதும், போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா். இது புரளி என தெரியவந்தது.

கடந்த ஒரு மாதத்துக்குள் ஏற்கெனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்த நிலையில், புதன்கிழமை 3 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.