மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

குமரி மாவட்ட பாசனக் கால்வாய்களில் மேலும் 15 நாள்களுக்கு தண்ணீா்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்ச் 15ஆம் தேதி வரை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:06 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்ச் 15ஆம் தேதி வரை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இறுதி நாளில் பாசனக் கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தப்படும். நிகழாண்டில் பல பகுதிகளில் நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராகாத நிலையில் உள்ளதால் மாா்ச் இறுதி வரை தண்ணீா் திறக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தமிழக அரசு மாா்ச் 15ஆம் தேதி வரை கால்வாய்களில் தண்ணீா் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.