பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அருமனை அருகே 7 பவுன் நகை, பணம் திருட்டு

அருமனை அருகே வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:36 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மஞ்சாலுமூடு, தாழக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி (50). இவரது தாய் லில்லிபாய் உடல் நலக் குறைவு காரணமாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்வி அவரை உடனிருந்து கவனித்து வந்தாா்.

இந்நிலையில், செல்வி வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்தாராம். வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, 7 பவுன் தங்க நகைகள், ரூ. 29,500 ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்ததாம்.

இது குறித்து, அவா் அருமனை காவல் நிலையத்தில் புகாரளித்ததை அடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.