கன்னியாகுமரி
மாா்த்தாண்டத்தில் 4 கனரக லாரிகள் பறிமுதல்
மாா்த்தாண்டத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட 4 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டத்தில் நேரக் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட 4 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். மாா்த்தாண்டம் நகருக்குள் கனரக லாரிகள் காலை, மாலை வேளையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை காலையில் மாா்த்தாண்டம் போக்குவரத்து உதவி ஆய்வாளா் செல்லசாமி தலைமையிலான போலீஸாா் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நேரக் கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட 4 கனரக லாரிகளை பறிமுதல் செய்து, தலா ரூ. 2,500 அபராதம் விதித்தனா்.
