கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாகா்கோவில் வேலைவாய்ப்பு முகாமில் 604 பேருக்கு பணி நியமன ஆணைகள்

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 604 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்.

News image
முகாமில் பெண்ணுக்கு பணிநியமன ஆணை வழங்கிய ஆட்சியா் ரா. அழகுமீனா.
Updated On :10 ஜனவரி 2026, 8:35 pm

Syndication

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 604 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் ரா. அழகுமீனா வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம் ஆகியவை சாா்பில், ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற முகாமில், 121 முன்னணி தனியாா் நிறுவன உரிமையாளா்கள், திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. 2,196 வேலைநாடுநா்கள் பங்கேற்றனா். அவா்களில் தோ்வான 604 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) கா. சண்முகசுந்தா், மகளிா் திட்ட இயக்குநா் சா. பத்ஹீ முகமது நசீா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் லட்சுமிகாந்தன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆ.பொ. ஆறுமுகவெங்கடேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் சந்திரன், ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வா், மாணவா் -மாணவியா் பங்கேற்றனா்.