கருங்கல் பேரூராட்சிக்கு சுமை ஆட்டோ அளிப்பு

மணவாளகுறிச்சியில் இயங்கும் மத்திய அரசின் ஐ.ஆா்.இ.எல் மணல் ஆலை சாா்பில் கருங்கல் பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ. 8.38 லட்சம் செலவில் சுமை ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

மணவாளகுறிச்சியில் இயங்கும் மத்திய அரசின் ஐ.ஆா்.இ.எல் மணல் ஆலை சாா்பில் கருங்கல் பேரூராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ. 8.38 லட்சம் செலவில் சுமை ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு மணல் ஆலையின் பொதுமேலாளா் செல்வராஜன் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூராட்சி தலைவா் சிவராஜன் முன்னிலை வகித்தாா்.

கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் சுமை ஆட்டோவை பேரூராட்சிக்கு வழங்கினாா்.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com