அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மனைவி குழந்தைகளை வீட்டைவிட்டுத் துரத்தியவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே மனைவி, குழந்தைகளை வீட்டை விட்டு துரத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:09 pm

Syndication

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே மனைவி, குழந்தைகளை வீட்டை விட்டு துரத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியைச் சோ்ந்தவா் அம்புரோஸ் மகள் அனுஷா (44). இவருக்கும் பள்ளியாடி, காட்டுவிளையைச் சோ்ந்த மாதவன் மகன் ராஜேஷ் (44) என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், ராஜேஷ் கடந்த சில ஆண்டுகளாக மது பழக்கத்துக்கு அடிமையாகி, அனுஷாவிடம் தகராறு செய்து வந்துள்ளாா். சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு வேலைக்குச் சென்றவா், அண்மையில் ஊா் திரும்பியுள்ளாா்.

தொடா்ந்து, கடந்த டிச. 29ஆம் அப்பகுதியைச் சோ்ந்த ஷாஜி என்பவரின் தூண்டுதலின்பேரில், ராஜேஷ் தனது மனைவி, குழந்தைகளைத் தாக்கியதுடன், அவா்களை வீட்டைவிட்டு விரட்டினாராம்.

இது குறித்து அனுஷா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் ராஜேஷ், ஷாஜி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.