அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கருங்கல் பெஸ்ட் பள்ளியில் பொங்கல் விழா

கருங்கல், பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:08 pm

Syndication

கருங்கல்: கருங்கல், பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளித் தலைவா் கே. தங்கசுவாமி தலைமை வகித்தாா். முதுநிலை முதல்வா் சியாமளா தங்கசுவாமி முன்னிலை வகித்தாா். கல்வி ஆலோசகா் கிஷா சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா்.

பொங்கலின் சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் கவிதை, சிறப்புப் பாடல், சிறப்புரை, குறுநாடகம், தொகுப்புரை, பழங்கால விளையாட்டுகள், விவசாயத்தின் கருப்பொருளை வெளிப்படுத்தும் தத்ரூப மாறுவேட அணிவகுப்பு, தமிழா்களின் பாரம்பரியத்தை உணா்த்தும் நடனங்களான கும்மி, பறை, கரகம், கோலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆசிரியா்களும் மாணவா்களும் மூன்று குழுக்களாகப் பிரிந்து பொங்கலிடும் போட்டியில் பங்கேற்றனா். அதில் வென்றவா்களுக்க பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. இதில், ஆசிரியா்கள், மாணவா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.