தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வட மாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே தனியாா் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்துவந்த வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:09 pm

Syndication

களியக்காவிளை: பளுகல் அருகே தனியாா் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை செய்துவந்த வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பளுகல் அருகே செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த 27 போ் பணியாற்றி வருகின்றனா். இதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சுனில் சந்தீப் (26) வேலை செய்து வந்தாா். அவருக்கு 2 நாள்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மேல்பாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாராம்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக காரக்கோணம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து நிறுவன மேலாளா் விஷ்ணு அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.