மாா்த்தாண்டம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, அரிசிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பவுல் மகன் தங்கமணி (65). மரம் வெட்டும் தொழிலாளி. இவா் சனிக்கிழமை தனது மகனுடன் சோ்ந்து பாகோடு, அரக்கல்விளை பகுதியில் தென்னை மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

படியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தொழிற்சாலையில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


