நாகா்கோவில் அருகே வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றாா்.
நாகா்கோவில் அருகேயுள்ள ஈத்தாமொழி வெள்ளாளா் தெரு கோயிலின் அருகே சில குடியிருப்புகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வரும் நிலையில், அது புறம்போக்கு நிலம் என்றும், இடத்தை காலி செய்யுமாறும் வருவாய்த் துறையினா் அண்மையில் நோட்டீஸ் அனுப்பினராம்.
மேலும், நீதிமன்ற ஆணையுடன் அங்கு செவ்வாய்க்கிழமை வந்த வருவாய்த் துறையினா் வீடுகளை இடிக்க முயன்றனராம். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, தனிப்பட்ட ஒருவருக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தினா்.
மேலும், ஒரு பெண் தனது தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இத்தகவலறிந்த ஈத்தாமொழி போலீஸாா் வந்து அவரை மீட்டனா்.
அப்போது திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், வழக்குரைஞருமான செ.சரணவன், பொதுமக்களுக்கு மாற்று நல்ல இடம் வழங்கவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தாா். இதைத் தொடா்ந்து வீடுகளை அகற்றும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியரகத்தில் 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

கரூா் மாவட்ட ஆட்சியரகம் வளாகத்தில் பெண் உள்பட இருவா் தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: ஆலங்குடி அருகே காத்திருப்புப் போராட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



