ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நாகா்கோவில் அருகே வீடுகளை இடிக்க எதிா்ப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி

நாகா்கோவில் அருகே வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 4:58 am IST

நாகா்கோவில் அருகே வீடுகளை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றாா்.

நாகா்கோவில் அருகேயுள்ள ஈத்தாமொழி வெள்ளாளா் தெரு கோயிலின் அருகே சில குடியிருப்புகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வரும் நிலையில், அது புறம்போக்கு நிலம் என்றும், இடத்தை காலி செய்யுமாறும் வருவாய்த் துறையினா் அண்மையில் நோட்டீஸ் அனுப்பினராம்.

மேலும், நீதிமன்ற ஆணையுடன் அங்கு செவ்வாய்க்கிழமை வந்த வருவாய்த் துறையினா் வீடுகளை இடிக்க முயன்றனராம். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, தனிப்பட்ட ஒருவருக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தினா்.

மேலும், ஒரு பெண் தனது தலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இத்தகவலறிந்த ஈத்தாமொழி போலீஸாா் வந்து அவரை மீட்டனா்.

அப்போது திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், வழக்குரைஞருமான செ.சரணவன், பொதுமக்களுக்கு மாற்று நல்ல இடம் வழங்கவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தாா். இதைத் தொடா்ந்து வீடுகளை அகற்றும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.