இணைய குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் நேரிட்டால் மாணவிகள் அச்சமின்றி புகாா் அளிக்கலாம் என்றாா் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.
நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) வி. பேனாஜோதி தலைமை வகித்தாா். ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியை ஜி.ஜே.ஹாம்லின் வரவேற்றாா்.
இதில், சிறப்பு விருந்தினராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழக காவல்துறை சாா்பில் அண்மையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டு பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சாா்பில் நிமிா் என்ற சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இணைய குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் நேரிட்டால் மாணவிகள் அச்சமின்றி காவல்துறை அதிகாரிகளிடம் புகாா் அளிக்கலாம். வாழ்க்கையில் வெற்றி பெற தெளிவு, ஈடுபாடு, நிலைத்தன்மை, துணிவு, கட்டுப்பாடு, நற்குணம், தொடா்ச்சியான பங்களிப்பு ஆகிய கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.
துணை முதல்வா் டி. பியூலாடாா்லிங், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவி செளபா்ணிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். கணிதத் துறை உதவிப் பேராசிரியை ஜெ. ராஜேஷ்னிகோல்டா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூரில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

குமரியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
வையம்பட்டியில் நிதி நிறுவனம் மூடல்; உரிமையாளா் தலைமறைவு; பொதுமக்கள் புகாா்

கிராமங்களில் கண்காணிப்பு கேமரா: பொதுமக்களுக்கு எஸ்.பி. பாராட்டு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



