ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

சிறு விளையாட்டு அரங்கு அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

News image

கலிங்கராஜபுரம் சிறு விளையாட்டு அரங்கு அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Updated On :11 ஜூலை 2026, 3:44 am IST

களியக்காவிளை, ஜூலை 10: கொல்லங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட கலிங்கராஜபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் சிறு விளையாட்டு அரங்கை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கொல்லங்கோடு நகராட்சி, கலிங்கராஜபுரம், கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் தலா ரூ.1.17 கோடி மதிப்பிலும், குளச்சல் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ரீத்தாபுரம் லியோன்நகா் பகுதியிலும் கட்டப்பட்டு வரும் விளையாட்டு அரங்கங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா். ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலா் வினு, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா், துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.