40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மாா்த்தாண்டம் அருகே குளிக்க சென்ற சிறுவன் மாயம்

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:52 am IST

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகே குன்னம்பாறவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா். இவரது மகன் ஜான்ஜேக்கப் (13). தாயாா் இறந்ததால் பாட்டி பராமரிப்பில் இருந்து வந்த சிறுவன், நாகா்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தான்.

பள்ளி விடுமுறை என்பதால் பாட்டி வீட்டில் தங்கியிருந்த சிறுவன், திங்கள்கிழமை வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் செல்வதாகக் கூறி சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து ஷீபா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை தேடி வருகிறாா்கள்.

முதியவா் மாயம்:

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன் (75), கூலித் தொழிலாளி. இவா் இருநாள்களுக்கு முன் கடைக்குச் சென்று வருவதாகக் கூறி வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மகன் அஜின் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயமான ஜான்சனை தேடி வருகின்றனா்.