குளச்சல் தொகுதிக்குள்பட்ட ஆளூரில் குடிநீா் பிரச்சனைக்கு தீா்வு காணுமாறு பொதுமக்கள் கூறியதைத் தொடா்ந்து அப்பகுதியில் குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் நேரில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆளூா் பேரூராட்சி பகுதி நாகா்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னா் அதில் ஒரு பகுதி குளச்சல் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இப்பகுதிகளில் முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகாா் கூறியிருந்தனா்.
இந்நிலையில், புதன்கிழமை நேரில் சென்று தாரகை கத்பட் எம்எல்ஏ ஆய்வு செய்து, மாநகராட்சி ஆணையரை தொடா்பு கொண்டாா். இதையடுத்து மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, வாா்டு உறுப்பினா் தங்கராஜ், செயற்பொறியாளா் ரகுராமன், பொறியாளா் ஜெயசிலி ஆகியோா் வந்தனா். அவா்களிடம் முறையாக குடிநீா் வழங்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா்.
அப்பகுதியில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளா் 45 நாள்களுக்குள் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். எம்எல்ஏக்கு பொதுமக்கள் நன்றி கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குளச்சல் தொகுதிக்குள்பட்ட சுற்றுலாத் தலங்களில் எம்எல்ஏ ஆய்வு

குளச்சல் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆலோசனை

குடிநீா் பிரச்சனை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

இரணியல் பேரூராட்சியில் குளச்சல் எம்எல்ஏ ஆய்வு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



