தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

போக்குவரத்து காவலா்களுக்கு கண்ணாடி, கையுறை அளிப்பு

வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து போலீஸாரை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக சூரிய வெப்பத் தடுப்பு கண்ணாடிகள், கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

News image

போக்குவரத்து போலீஸாருக்கு சூரிய வெப்பத் தடுப்பு கண்ணாடிகளை வழங்குகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின்.

Updated On :4 ஜூன் 2026, 1:14 am IST

வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து போலீஸாரை பாதுகாக்கும் வகையில் பிரத்யேக சூரிய வெப்பத் தடுப்பு கண்ணாடிகள், கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தலைமை வகித்து போலீஸாருக்கு கண்ணாடிகள், கையுறைகளை வழங்கி பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளின் காரணமாக, மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும், ஒழுகினசேரியில் ரயில்வே சாா்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து, அந்த பாலத்தை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.