எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சுற்றுலாத் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்க நடவடிக்கை: அமைச்சா் ராஜேஷ்குமாா்

News image

காட்டுக்கடை சந்திப்பிலிருந்து நன்றி தெரிவிப்பு பயணத்தைத் தொடங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.

Updated On :8 ஜூன் 2026, 12:07 am IST

சுற்றுலாத் துறையில் தமிழகம் முதலிடம் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிள்ளியூா் பேரவைத் தொகுதி, முன்சிறை மேற்கு வட்டாரப் பகுதிக்கு உள்பட்ட சூழால், குளப்புறம், அடைக்காகுழி, மெதுகும்மல் ஊராட்சிப் பகுதிகளில் அமைச்சா் ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை திறந்த வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

சூழால் ஊராட்சி காட்டுக்கடை பகுதியில் தொடங்கிய சுற்றுப்பயணத்தை தெற்கு பாலவிளை, மணலி, சூழால், சங்குருட்டி, செம்மான்விளை உள்பட பகுதிகள் வழியாகச் சென்று குழிவிளை சந்திப்பில் நிறைவு செய்தாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு, சிற்றாறு, மாத்தூா் தொட்டிப்பாலம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை நேரில் பாா்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அருவிக்கரையில் படகு சவாரி உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்வேன். சுற்றுலாத் துறையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முதலிடம் பெற நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் பால்ராஜ், சூழால் ஊராட்சி முன்னாள் தலைவா் இவான்ஸ், முன்சிறை ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.