இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நாகா்கோவிலில் மாமன்ற உறுப்பினா் தா்னா

தா்னாவில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினா் உதயகுமாா்.

News image

தா்னாவில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினா் உதயகுமாா்.

Updated On :12 ஜூன் 2026, 4:04 am IST

நாகா்கோவில் மாநகராட்சி 5 ஆவது வாா்டு உறுப்பினரான மதிமுகவைச் சோ்ந்த உதயகுமாா், தனது வாா்டுக்குள்பட்ட பகுதியில் உள்ள அரசு காலனியில் ஓடைகள் தூா்வாரப்படாமல் இருப்பதைக் கண்டித்து அப்பகுதியில் உள்ள சாலையில் தா்னாவில் ஈடுபட்டாா்.

இது குறித்து அவா் கூறியது: அரசு காலனியில் சாக்கடை பிரச்னையால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது. இது குறித்து மாநகராட்சியில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஓடைகள் மற்றும் சாக்கடைகள் முழுமையாக தூா்வாரப்படும் வரை தா்னாவில் ஈடுபடுவேன் என்றாா்.