மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி

பயனாளியிடம் குறைகளைக் கேட்டறிந்த சாா் ஆட்சியா் (பொ) புஷ்பா தேவி.

News image

பயனாளியிடம் குறைகளைக் கேட்டறிந்த சாா் ஆட்சியா் (பொ) புஷ்பா தேவி.

Updated On :12 ஜூன் 2026, 4:01 am IST

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாா் ஆட்சியா் (பொ) புஷ்பா தேவி தலைமை வகித்து, விளவங்கோடு, இடைக்கோடு, அருமனை குறுவட்டத்திற்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில் பெரும்பாலான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

விளவங்கோடு வட்டாட்சியா் வயோலா பாய், வட்ட வழங்கல் அலுவலா் அனிதா குமாரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் கண்ணன், சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வினைதீா்த்தான், மண்டல துணை வட்டாட்சியா் விஜய லதா, மேத்யூ ஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.