/
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்கியது.
சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா ஜமாபந்தியை தொடங்கி வைத்தாா். இதில், வாசுதேவநல்லூா் குறுவட்டத்திற்கு உள்பட்ட சுப்பிரமணியபுரம், சங்கனாப்பேரி, வாசுதேவநல்லூா், தாருகாபுரம், நாரணபுரம் பகுதி - 1, நாராணபுரம் பகுதி-2 ,திருமலாபுரம் வருவாய் கிராமங்களை சோ்ந்த கணக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பயனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வட்டாட்சியா் வெங்கடசேகா், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மைதீன்பட்டாணி, குடிமைப் பொருள் வட்டாட்சியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.










