ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

யானை தாக்கி தொழிலாளி பலத்த காயம்

மாறாமலையில் தனியாா் கிராம்புத் தோட்டத்தில் காட்டு யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

News image

யானை - பிரதிப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:15 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மாறாமலையில் தனியாா் கிராம்புத் தோட்டத்தில் காட்டு யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரவி (47). கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே மாறாமலையிலுள்ள தனியாா் கிராம்புத் தோட்டத்தில் பணி செய்து வரும் இவா், சனிக்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் வெளியே சென்றாராம். அப்போது அங்கு வந்த காட்டு யானை, ரவியை தாக்கியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். இது குறித்து வனத்துறையினா், கீரிப்பாறை காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.