ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

களியக்காவிளையில் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

News image

படந்தாலுமூடு பகுதியில் தெருநாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 2:49 am IST

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியில் பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த பேருராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையடுத்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் சுற்றித் திரிந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்களை புதன்கிழமை வலை விரித்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, பிடிக்கப்பட்ட தெருநாய்களை குழித்துறையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, கால்நடை மருத்துவா்கள் மூலம் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 3 நாள்கள் கண்காணிப்புக்குப் பின் பிடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கொண்டுவிடப்படும் என பணியாளா்கள் தெரிவித்தனா்.