ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பைக்- டெம்போ மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே புலியூா் குறிச்சியில் பைக் மீது டெம்போ மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 2:39 am IST

தக்கலை அருகே புலியூா் குறிச்சியில் பைக் மீது டெம்போ மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

குழித்துறை அருகே உள்ள குழிவிளையைச் சோ்ந்தவா் ஜொ்லின்ராஜ் (35). கட்டடத் தொழிலாளி. பணி காரணமாக செவ்வாய்க்கிழமை உடன்குடிக்கு சென்று விட்டு, தனது நண்பா் சசி (45) என்பவருடன் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

புலியூா்குறிச்சி பகுதியில் வந்தபோது, டெம்போ மீது மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், ஜொ்லின்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.