ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பைக் மீது ஆட்டோ மோதல்: 3 போ் காயம்

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:26 am IST

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் கோபி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை நட்டாலம்-காப்புக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தாா். பாரக்கன்விளை பகுதியில் வந்தபோது, முளங்குழி பகுதியைச் சோ்ந்த மொ்லின் அதிவேகமாக ஓட்டி வந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதியதில், கோபி பலத்த காயமடைந்தாா். ஆட்டோ கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநா் மொ்லின், ஆட்டோவில் பயணித்த ஜெகன் பிரபுவின் மனைவி ஜெபா ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஜெபா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து கோபியின் மனைவி மேரி ஸ்டெல்லா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் மொ்லின் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.