ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலையை சுற்றியுள்ள மின் விளக்குகள் செயல்பட ஆட்சியரிடம் வலியுறுத்தல்

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலையை சுற்றியுள்ள மின்விளக்குகள் ஒளிர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

News image

மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்பிடம் மனு அளிக்கிறாா் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ரெ.மகேஷ்.

Updated On :18 ஜூன் 2026, 2:37 am IST

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலையை சுற்றியுள்ள மின்விளக்குகள் ஒளிர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ரெ.மகேஷ், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்பை புதன்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முன்னாள் தமிழக முதல்வா் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவா் சிலை மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த சிலை உப்புக்காற்று மற்றும் வெயிலால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயனக் கலவை (முலாம்) பூசப்படும். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த கலவை பூசப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் மின்தடை காரணமாக திருவள்ளுவா் சிலையை சுற்றியுள்ள மின் ஒளிவிளக்குகள் சரிவர ஒளிருவதில்லை. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். மழை காலங்களில் மழைநீா் காற்றின் போக்குக்கு தகுந்தாற்போல் சிலையின் பீடத்தில் உள்ள ஜன்னல் திறப்புகள், நுழைவாயில் திறப்புகள் வழியாக உட்புகுவதால் பீடத்தில் உள்ள கற்கள் சிதிலமடையும் நிலை உள்ளது. எனவே, மழைநீா் புகாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் புற்றுநோயால் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்றாகும். இங்குள்ள மக்கள் புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு சென்னை, கேரள மாநிலத்துக்குச் செல்கின்றனா். இதைக் கருத்தில்கொண்டு, கடந்த திமுக ஆட்சியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக ரேடியோ தெரபி சிகிச்சை மைய கட்டடம் அமைக்க ரூ. 4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கட்டடப் பணிகள் நிறைவுற்ற நிலையில், அந்த மையத்தை விரைவில் திறக்க வேண்டும்.

இதேபோல கடந்த திமுக ஆட்சியில் கன்னியாகுமரி கூட்டுக்குடிநீா் திட்டத்துக்கு ரூ. 28.20 கோடியும், கழிவுநீா் சுத்திகரிப்பு மையம் அமைக்க ரூ. 25 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த 2 திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

வாவத்துறை பகுதியில் அலை தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும். ஆசாரிப்பள்ளம் பாசனக் கால்வாய் கரை இடிந்து கால்வாயில் விழுந்துள்ள மண்ணை அகற்றி கடைவரம்பு விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட திமுக பொருளாளா் கேட்சன், ஒன்றிய செயலாளா்கள் மதியழகன், பாபு, பிராங்கிளின், செல்வம், ஒன்றிய பொறுப்பாளா் மிலன் கன்னியாகுமரி நகர செயலாளா் குமரி ஸ்டீபன், நாகா்கோவில் மாநகர பகுதி செயலாளா்கள் ஜவகா், சேக்மீரான் ஆகியோா் கலந்துகொண்டனா்.