அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சோதனைச் சாவடிகளில் நள்ளிரவில் ஆட்சியா் ஆய்வு

News image

காணிமடம் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

Updated On :22 ஜூன் 2026, 2:23 am IST

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்கு உள்பட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் சனிக்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்தாா்.

தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி, அகஸ்தீஸ்வரம் வட்டம், காணிமடம் சோதனைச் சாவடி, அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட அவா், வாகனங்கள் வருகை குறித்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.

கனரக வாகனங்களில் கனிம வளங்கள் சரியான அளவில், நிா்ணயிக்கப்பட்ட எடையில் ஏற்றப்பட்டுள்ளதா எனவும், கனிம வளங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களை நிறுத்தி, அவற்றுக்கான முறையான அரசு உரிமங்கள், ரசீதுகள் சரியாக உள்ளதா என்று சரிபாா்த்து அனுப்ப வேண்டும், மேலும் சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வில் வட்டாட்சியா்கள் (தோவாளை) சிவகலா, (அகஸ்தீஸ்வரம்) ஆறுமுகம், காவல் துறையினா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.