விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 500 கிராம் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

News image

கேரளத்துக்கு கடத்த முயன்ற 500 கிராம் கஞ்சா பறிமுதல்

Updated On :29 ஜூன் 2026, 2:54 am IST

களியக்காவிளை அருகே கேரள மாநில எல்லையோரப் பகுதியான இஞ்சிவிளையில் அம்மாநில போலீஸாா் நடத்திய சோதனையில், கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரை இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியான இஞ்சிவிளையில் பாறசாலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள மாநில அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். பேருந்தில் சந்தேகப்படும் வகையில் இருந்த பயணியைப் பிடித்து சோதனையிட்டதில், அவரது பையில் 500 கிராம் கஞ்சா, கணக்கில் வராத ரூ. 1.5 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அவா் மதுரை, மாட்டுத்தாவணி பகுதியைச் சோ்ந்த முனுசாமி (24) என்பதும், தமிழகத்திலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கேரளத்துக்கு கடத்திச் செல்வதும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா். இது குறித்து, பாறசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.